Connect with us

தமிழ்நாடு

சிமெண்ட் விலை ரூ.100 திடீரென உயர்வு: பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு நெருக்கடியா?

Published

on

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்து வந்த நிலையில் தற்போது ஆட்சி மாறி உள்ளது என்பதும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 10 ஆண்டுகளில் சிமெண்ட் விலை கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில் திமுக ஆட்சியை ஏற்க இருக்கும் நிலையில் திடீரென நேற்று ஒரே நாளில் சிமெண்ட் விலை ரூபாய் 100 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து கட்டுமான தொழிலுக்கு மிகப்பெரிய அடி விழுந்து உள்ளதாக கூறப்படுகிறது.

சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகள் திமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் இருப்பதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் முதன்முதலாக முதலமைச்சர் பதவியை ஏற்க இருக்கும் நிலையில் இந்த நெருக்கடியை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் சிமெண்ட் விலை உயர்வை அடுத்து அதிமுக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிமெண்ட் விலையை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிமெண்ட் ஆலையின் பங்குதாரர்களாக உள்ள திமுக மூத்த நிர்வாகிகளை நிர்வாகிகளுக்கு ஆதரவாக சிமெண்ட் உயர்வு விலையை கண்டுகொள்ளாமல் ஸ்டாலின் இருப்பாரா? அல்லது பொது மக்களுக்கு நலன் பயக்கும் வகையில் சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?