தமிழ்நாடு
சிமெண்ட் விலை ரூ.100 திடீரென உயர்வு: பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு நெருக்கடியா?
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்து வந்த நிலையில் தற்போது ஆட்சி மாறி உள்ளது என்பதும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 10 ஆண்டுகளில் சிமெண்ட் விலை கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில் திமுக ஆட்சியை ஏற்க இருக்கும் நிலையில் திடீரென நேற்று ஒரே நாளில் சிமெண்ட் விலை ரூபாய் 100 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து கட்டுமான தொழிலுக்கு மிகப்பெரிய அடி விழுந்து உள்ளதாக கூறப்படுகிறது.
சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகள் திமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் இருப்பதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் முதன்முதலாக முதலமைச்சர் பதவியை ஏற்க இருக்கும் நிலையில் இந்த நெருக்கடியை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் சிமெண்ட் விலை உயர்வை அடுத்து அதிமுக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிமெண்ட் விலையை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிமெண்ட் ஆலையின் பங்குதாரர்களாக உள்ள திமுக மூத்த நிர்வாகிகளை நிர்வாகிகளுக்கு ஆதரவாக சிமெண்ட் உயர்வு விலையை கண்டுகொள்ளாமல் ஸ்டாலின் இருப்பாரா? அல்லது பொது மக்களுக்கு நலன் பயக்கும் வகையில் சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.