இந்தியா
100 வேலை நாள் திட்டத்திற்கு பெயர் மாற்றம் – அறிமுக நிலையிலேயே எதிர்க்க எதிர்கட்சிகள் மும்முரம்

ஏரி வேலை என்றும் நூறு நாள் வேலை என்றும் எளிய மக்களால் அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் 2005ம் ஆண்டு அப்போதைய மன்மோகன் அரசால் கொண்டு வரப்பட்டு கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு முழுமையான நிதி ஒதுக்கீட்டை வழங்கி வந்தது. பின்னர் வந்த மோடி அரசு இத்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரின் பங்கு 73 சதவீதம் எனவும் மாநில அரசின் பங்களிப்பு 27 சதவீதம் எனவும் 2016-17ம் ஆண்டுகளில் மாற்றியது. சமீப நாட்களாக இதற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதி சரவர கிடைப்பதில்லை என பல மாநில அரசாங்கங்கள் குறை கூறி வருகின்றன.
இந்த நிலையில் இந்த திட்டத்தின் பெயரிலுள்ள மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி விட்டு திட்டத்தின் பெயரை “விக்சித் பாரத் ஜி ராம் ஜி“ என மாற்றிட ஒரு புதிய மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறது. இதனை அறிமுக நிலையிலேயே எதிர்க்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்ட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் இனி 125 வேலை நாள்கள் வழங்கப்படும் எனவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. மேலும் இதற்கான நிதி பங்களிப்புகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது. இதன்படி வடகிழக்கு மாநிலங்கள் இமயமலை மாநிலங்கள் யுனியன் பிரதேசங்கள் ஆகிய பகுதிகளில் ஒன்றிய அரசின் பங்கு 90 சதவீதம் எனவும் சம்பந்தப்பட்ட அரசுகளின் பங்கு 10 சதவீமத் எனவும் இருக்கும். சட்டசபை உள்ள மாநிலங்களில் ஒன்றிய அரசின் பங்கு 60 சாவீதம் எனவும் அந்தந்த மாநில அரசுகளின் பங்கு 40 சதவீதம் எனவும் இருக்கும். சட்டசபை இல்லாத யுனியன் பிரதேசங்களில் ஒன்றிய அரசே 100 சதவீத நிதியையும் தரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால் வேலையின்மைப்படி வழங்கப்படும். இத்தொகையை மாநில அரசே செலுத்த வேண்டும்.
விதைப்பு மற்றும் அறுவடை போன்ற உச்ச விவசாய பருவங்களை உள்ளடக்கிய ஒரு காலத்தை மாநில அரசு அறிவிக்கும். அந்தக் காலத்தில் இந்த சட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப் படாது. இது தொடர்பான நாட்களை 60 நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் மாநிலங்கள் புதிய சட்டத்தின் விதிகளுக்கு இணங்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் 88.57 லட்சம் பேர் பலனடைந்து வருகின்றனர்
இது காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே காந்தி பெயர் நீக்கப்படுகிறது என காங்கிரஸ் குற்றம் காட்டி உள்ளது் இம்இசோதாகை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க இந்தியா கூட்டணி கட்சியினர் மும்முரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.












