Connect with us

இந்தியா

புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அவ்வளவுதான்: அச்சிடும் பணி நிறுத்தம்!

Published

on

இந்தியாவில் உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மோடி தலைமையிலான மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ஒரே இரவில் அறிவித்தார் பிரதமர் மோடி. அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால் சாமானிய மக்கள் முதல் சிறுகுறு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்திய பொருளாதாரமே இதனால் சரிந்தது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என கூறப்பட்டாலும் அதன் பலனை அடையவில்லை. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக இவற்றைத் திரும்பப் பெறும் முடிவில் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த அரசு தரப்பு தகவல் தி பிரிண்ட் ஊடகத்துக்குக் கிடைத்துள்ளது. இந்த நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதால் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அர்த்தமில்லை. இந்நோட்டுகள் மெதுவாக வங்கி அமைப்புக்குத் திரும்பிப்பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 6.73 லட்சம் கோடி மதிப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இது மொத்த ரூபாய் நோட்டுகளில் 37 சதவீதமாகும்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?