Connect with us

தமிழ்நாடு

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாதம் ரூ.1000: இல்லத்தரசிகளுக்கு அல்ல, மாணவிகளுக்கு!

Published

on

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.

பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுப்பதற்காக கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை அவர்களுடைய வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தப்படும் என நிதியமைச்சர் இன்றைய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர் கல்வியில் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சலுகை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மட்டுமே கிடைக்கும் .

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் மேற்படிப்பில் சேரும்போது அதாவது பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு அல்லது தொழில் படிப்பு ஆகியவற்றில் சேரும்போது, இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூபாய் 1000 அவருடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த சலுகை பெறும் மாணவிகள் ஏற்கனவே வேறு சில கல்வி உதவித்தொகை பெற்று இருந்தாலும் கூட இந்த திட்டத்தில் கூடுதலாக உதவியை பெறலாம் என்றும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?