Connect with us

இந்தியா

West Bengal – சொந்த தொகுதியில் சறுக்கிய மம்தா; தோல்வி உறுதியா..?

Published

on

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைத் தக்க வைத்த திரிணமுல், மூன்றாவது முறையும் வெற்றி பெறும் நோக்கில் தேர்தலை சந்தித்தது.

அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் வளர்ச்சி அடைந்துள்ள பாஜக, இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே மேற்கு வங்கத்தில் கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றது பாஜக.

மதியம் 3 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, 201 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. பாஜக, 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையும் மம்தா தலைமையிலான ஆட்சியே மேற்கு வங்கத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மேற்கு வங்க நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியைவிட சில ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார். மதியம் 3 மணி நிலவரப்படி மம்தா, 30,655 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் சுவேந்து அதிகாரி, 34,430 ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

 

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?