Connect with us

தமிழ்நாடு

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே துரோகிகள்: அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ்

Published

on

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவருமே அம்மாவின் உயிரை காக்க தவறிய துரோகிகள் எனக்கூறி அக்கட்சியில் இருந்து கோவை செல்வராஜ் விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கடந்த சில மாதங்களாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது என்பதும், அக்கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறிவரும் நிலையில் உண்மையான அதிமுக நாங்கள் தான் என ஓபிஎஸ் கூறிவருகிறார்.

இந்த நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் திடீரென அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆறுமுகசாமி அறிக்கை வந்த பிறகு ஜெயலலிதாவின் மரணத்திற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரின் சுயநலமே காரணம் என்று தான் புரிந்து கொண்டதாகவும் ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்காக அனுப்பி இருந்தால் கண்டிப்பாக அவர் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அம்மாவின் உயிரைக் காக்கத் தவறிய ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய துரோகிகளுடன் இணைந்து பணியாற்ற தான் விரும்பவில்லை என்றும் எனவே அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகினாலும் திராவிட பாரம்பரியத்தில் இருந்து விலகவில்லை என்றும் அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்றும் அடுத்தகட்ட முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் கோவை செல்வராஜ் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?