Connect with us

தமிழ்நாடு

100% தடுப்பூசி: தமிழ்நாட்டில் சாதனை

Published

on

தமிழ்நாட்டில் முதல் முறையாக கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அவர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நகராட்சியாக கொடைக்கானல் திகழவுள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதை அடுத்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நிலையில் கொடைக்கானல் பகுதியில் 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவிலேயே முதல் முறையாக 100% தடுப்பூசி செலுத்திய நகராட்சி என்ற பெருமையை கொடைக்கானலுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானலில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதே இந்த சாதனைக்கு காரணமாக உள்ளது. அதேபோல் பழனியில் 68% பேர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் விரைவில் இந்நகரமும் 100% என்ற இலக்கை அடையும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே பழங்குடி மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் நீலகிரி என்ற பெருமையை கிடைத்த நிலையில் தற்போது கொடைக்கானல் நகராட்சியில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து இன்னொரு பெருமையும் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?