தமிழ்நாடு
கருணாஸ் அடுத்த அதிரடி: ஜனாதிபதியையும் கூவத்தூரில் முதல்வரையும் நான் தான் தேர்வு செய்தேன்!

திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். அதில் காவல்துறை டிசி அரவிந்தனையும் முதல்வர் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்தார்.
கருணாஸ் தனது பேச்சில் சர்ச்சைக்குறிய கருத்தக்கள் பலவற்றை தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கருணாஸ் உள்ளிட்ட சிலர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து கருணாஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் பரவியது. இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் கருணாஸ். அப்போது தான் உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக வருத்தங்களை தெரிவித்தார்.
மேலும் தவறு செய்த அதிகாரிகளை தான் மேடையில் விமர்சித்ததாகவும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் முன்னதாக கூவத்தூர் குறித்து கருணாஸ் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், ஜனாதிபதியை நான் தான் ஓட்டு போட்டு தேர்வு செய்தேன். மறுக்க முடியுமா? அதே போலதான் கூவத்தூரிலும் முதல்வரை தேர்வு செய்தேன் என்றார் என்றார் அதிரடியாக. எம்எல்ஏக்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்து பல கூத்துக்களை அரங்கேற்றி நடந்த சம்பவத்துடன் ஜனாதிபதி தேர்தலை கருணாஸ் ஒப்பிட்டுள்ளது மீண்டும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்.
















