தமிழ்நாடு
இந்தியன் தாத்தா சொன்ன தேவர் மகன் 2 கதை.! மக்கள் நீதி மய்யம் கட்சி பகிர்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியன் 2 ஆம் பாகத்தைத் தொடர்ந்து தேவர்மகன் 2 ஆம் பாகத்தின் படத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்த பின் திரைப்படத்தில் நிச்சயம் நடிக்க மாட்டேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்பொழுது புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் பொதுமக்கள் மற்றும் அவரின் கட்சி தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல் அரசியலுக்கு வந்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவதற்கு முன்பாகவே, தான் சொன்ன வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்ஸ்கள் கொந்தலிதுள்ளனர்.
ஒருவேளை பதவிக்கு வந்த பின்னும், இதே போன்று செய்தால், நிச்சயமாகத் தமிழக மக்களின் நிலையை மாற்ற இந்தியன் தாத்தாவால் கூட முடியாது போல.




















