Connect with us

தமிழ்நாடு

ஜெயலலிதா சிலை திறப்பில் மீண்டும் சர்ச்சை!

Published

on

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் புதிய சிலையை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் திறந்தனர். இந்த சிலை திறப்பில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. ஆனால் இந்த சிலை ஜெயலலிதாவின் உருவத்தை போல இல்லாமல் இருந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஜெயலலிதாவின் உருவம் சுத்தமாக அந்த சிலையோடு ஒத்துப்போகவில்லை.

இதனையடுத்து அந்த சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் 8 அடி உயரம், 800 கிலோ எடை கொண்ட ஜெயலலிதாவின் புதிய சிலை கடந்த அக்டோபர் 23-ம் தேதி சென்னை கொண்டுவரப்பட்டு இன்று காலை 9 மணியளவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஏற்கனவே திறக்கப்பட்ட சிலை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்ட சிலையும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக எந்த ஒரு தலைவரின் சிலையை திறப்பதற்கு முன்பு பட்டு போன்ற துணியால் போர்த்தி வைப்பது வழக்கம். ஆனால் ஜெயலலிதாவின் சிலை ஒரு வெள்ளை துண்டைக் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?