சினிமா செய்திகள்
’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு இரண்டு தாதா சாகே பால்கே விருது!
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த ஆண்டு அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஒரு சில சர்ச்சைகள் இந்த படத்திற்கு எழுந்தாலும் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் நன்மதிப்பை இந்த படம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே பல விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது தாதா சாகிப் பால்கே திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை இந்த படம் என்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
முதலாவதாக ’ஜெய்பீம்’ திரைப்படம் சிறந்த திரைப்பட விருதை பெற்றுள்ளது. இந்த விருதை அதன் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் இரண்டாவதாக இந்த படத்திற்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை இவர் இந்த படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் அசத்தலாக நடித்த மணிகண்டன் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
’ஜெய்பீம்’ திரைப்படம் தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை பெற்றது படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது