Connect with us

இந்தியா

அரசிடம் இருந்தபோது இதைவிட நன்றாக இருந்தது: ஏர் இந்தியா குறித்து பிரதமரின் ஆலோசனை குழு தலைவர்..!

Published

on

ஏர் இந்தியா மத்திய அரசிடம் இருந்தபோது கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் தற்போது டாடா நிறுவனத்திடம் இருக்கும் நிலையில் அந்த நிறுவனம் படிப்படியாக லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனியாரிடம் சென்ற பிறகுதான் மிக மோசமாக செயல்படுகிறது என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் டெட்ராய் முன்பதிவு செய்து இருந்தார். அவரது விமானம் மாலை 4:35 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால் இரவு 7 மணி ஆகியும் புறப்படவில்லை என்றும் இன்னும் சரியாக எப்போது புறப்படும் என்ற தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

தனியார் மயமாக்கலுக்கு முன் விமான நிறுவனம் சிறப்பாக இருந்தது என்றும் தொடர்ச்சியாக விமானம் கிளம்பும் நேரம் மாற்றப்பட்டு வருகிறது என்றும் இதற்கு சரியான விளக்கமும் அளிக்கவில்லை என்றும் அவர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். காலதாமதம் ஆனதற்கு யாரும் பொறுப்பாக இருப்பதாக தெரியவில்லை என்றும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை விமானம் கிளம்பும் நேரத்தை மாற்றி வருகிறார்கள் என்றும் யாருக்கும் பொறுப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி – மும்பை விமானம் சொர்க்கம் அல்ல என்றும் நரகமாக இருந்தது என்றும் நான்கு மணி நேரம் ஆக நாங்கள் காத்திருக்கின்றோம் என்றும் பயணிகள் அனைவரும் மிக கோபமாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஏர் இந்தியா விளக்கம் அளித்தபோது விமானம் 8 மணிக்கு கண்டிப்பாக கிளம்பும் என்றும் தயவுசெய்து நம்பிக்கையுடன் இருங்கள் என்றும் அனைத்து பயணங்களுக்கும் உதவ எங்கள் நிறுவனம் முயற்சி செய்கிறது என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த பயணிக்கும் அவர்கள் உதவவில்லை என்றும் கோபமடைந்த பயணிகளின் வீடியோவை நான் ட்விட் செய்யட்டுமா என்றும் நான்கு மணி நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு டீ காப்பியாவது கொடுக்க பரிந்துரை செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமத்தால் ஏர் இந்தியா கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது 470 புதிய விமானங்களுக்கு ஆடர் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?