இந்தியா
தமிழ்நாட்டில் இந்தியாவின் முதல் ஆள் இல்லா விமான பயிற்சி சோதனை மையம்!
விமானப் படையில் போரின் போது ஏற்படும் மனித உயிர்கள் இழப்பைத் தடுக்க ஆள் இல்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன.
இது போன்ற தொழில்நுட்பங்களுக்கு நாம் வெளிநாடுகளைச் சார்ந்துள்ள நிலையில், மத்திய அரசு உள்நாட்டிலேயே அதனைச் செய்வதற்காகத் திட்டமிட்டு வந்தது. அதற்காகப் பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஆள் இல்லா விமான பயீர்ச்சி சோதனை மையத்தை அமைக்கத் திட்டமிட்டு இருந்தது.
முதற்கட்டமாக அதற்கான சோதனை மையத்தைச் சென்னை அருகில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
மாநில அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) கெல்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து, ரூ.50 கோடியில் இந்த ஆள் இல்லா விமானம் சொதனை மையத்தை அமைக்க உள்ளது. இதுவே இந்தியாவின் முதல் ஆள் இல்லா விமான பயிற்சி சோதனை மையம்.
இதனைப் பயன்படுத்தி எல்லை மற்றும் கடற்பகுதிகளில் ஏற்படும் ஊடுருவல்களை எளிதாகக் கண்டறிய முடியும். போரின் போது மனித இழப்புகளைக் குறைக்க உதவும் எனக் கூறப்படுகிறது.