கிரிக்கெட்
பிரேக்கிங் நியூஸ்: உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையடும்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராத நிகழ்வாக இந்தியா போராடி தோல்வியை தழுவியது.
இதனால் இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இதனை தற்போதுவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்நிலையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் பாஜகவின் அரசியல் அனுகுமுறையை நக்கலாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரேக்கிங் நியூஸ். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும். அமித்ஷா அதிரடி அறிவிப்பு! நியூசிலாந்து ஆட்டக்காரர்கள் 9 பேர் அந்த அணியில் இருந்து விலகி இந்திய அணியில் சேர்ந்துள்ளதால் திடீர் திருப்பம் என பதிவிட்டுள்ளார். இது பாஜகவின் அரசியல் அனுகுமுறையை விமர்சிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இந்த டுவிட்டர் பதில் பல தராசு ஷியாமை விமர்சித்து வருகின்றனர்.