இந்தியா
அமெரிக்கா மீதான இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதை அடுத்து, உலகு நாடுகள் பல அவர்கள் பொருட்களை குறைந்த வரியில் அமெரிக்காவில் இறக்குமதி செய்கின்றன. ஆனால் அமெரிக்க பொருட்களை அவர்கள் நாட்டில் இறக்குமதி செய்ய அதிக வரி விதிக்கின்றன என குற்றம் சாட்டி இருந்தார்.
தொடர்ந்து டிரம்பின் முடிவுகள், விமர்சனங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த நாடுகளின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி வந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த சந்திப்பின் போது அமெரிக்க பொருட்கள் மீதான 100 சதவிகித வரியை 30 சதவிகிதமாகக் குறைக்க முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இதன் மூலம் இந்திய பொருட்கள் அமெரிக்கவில் இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட சிறப்பு பிரிவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லமால், அதானி நிறுவனம் சில ஒப்பந்தங்களைக் கைப்பற்ற லஞ்சம் வழங்கியதாக அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டு வந்த சட்டத்தை நீக்க இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தால் அமெரிக்க நிறுவனங்களும் பெரும் பாதிப்படையும். எனவே இந்த சட்டத்தைத் திருத்துவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.















