இந்தியா
ஆவணப்படமா எடுக்குற.. டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை ரெய்டு..!

2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்த ஆவண படத்தை பிபிசி உலகம் முழுவதும் வெளியிட்ட நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் திடீரென இன்று வருமானத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடந்த கலவரத்தை மையமாக வைத்து இரண்டு பகுதியாக ஆவணப்படத்தை பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆவண படங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் எதிர்கட்சிகள் இந்த ஆவணப்படத்தை வீதி வீதியாக மொழிபெயர்த்து வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி பல கல்லூரிகளில் மாணவர்கள் இந்த ஆவண படத்தை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சற்றுமுன் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. பிபிசி அலுவலகத்தின் கணக்கு வழக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு குறித்து புகார் வந்ததாகவும் அந்த புகாரியின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் ஊறப்படுகிறது. ந்த சோதனையில் சிக்கும் ஆவணங்கள் குறித்த தகவல்கள் இனிமேல் தான் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிபிசியின் ஆவணப்படத்தின் எதிரொலியாக இந்த சோதனை நடவடிக்கையா? அல்லது உண்மையாகவே வந்த புகாரின் அடிப்படையில் தான் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே பிபிசி ஆவண படத்தை இங்கிலாந்து உள்பட பல நாடுகள் புறக்கணித்து உள்ள நிலையில் இந்த சோதனையை நடவடிக்கைக்கு பிறகு பிபிசியின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.




















