Connect with us

தமிழ்நாடு

நிலக்கரிக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி பணம் தரவில்லையா? தமிழ்நாடு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

Published

on

தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்கள் நிலக்கரிக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி பணம் தரவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் கோடையில் மின்சாரம் உபயோகம் அதிகரிப்பதன் காரணமாக சில மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி கிடைக்காத நிலையில் பல மாநிலங்களில் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது .

அடுத்த மாத இறுதிக்குள் நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நான்கு மாநிலங்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது .

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மூலம் செயல்படும் அனல் மின் நிலையங்களை மாநில அரசுகள் உடனே இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள மத்திய அரசு தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் தங்களது ஆலோசனைகளை செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நிலக்கரி வாங்கியதற்கான ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயை இதுவரை கோல்-இந்தியா நிறுவனத்திற்கு செலுத்தவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?