சினிமா செய்திகள்
3வது குழந்தை பெற்று கொண்டால் சிறை அல்லது அபராதம்: நடிகையின் சர்ச்சை கருத்து!
மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என பிரபல நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் ’தலைவி’ படத்தில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் அவ்வப்போது தனது டுவிட்டரில் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் சற்று முன் அவர் பதிவு செய்த டுவிட் ஒன்றில் மக்கள் தொகை காரணமாக இந்தியா பெரும் சிரமத்தை அடைந்து வருகிறது என்றும் 130 கோடி என்பது அதிகாரபூர்வ கணக்கு என்றும் இதோடு சட்டவிரோதமான குடியேறியவர்களை சேர்த்தால் 150 கோடிக்கும் மேல் இந்தியாவின் மக்கள்தொகை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா இந்தியாவை விட மூன்று மடங்கு நிலத்தையும் வளத்தையும் வைத்திருந்தாலும் அங்கு 32 கோடி மக்கள் தான் உள்ளனர் என்றும், ஆனால் இந்தியா தான் 130 கோடி மக்கள் தொகையால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன என்றும், இன்றைய நிலையில் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என்று கங்கனா கூறியுள்ளார்.
கங்கனாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/ ஆனால் அதே நேரத்தில் கங்கனா சரியான கருத்தை கூறியுள்ளார் என்றும் அவரது கருத்தை மத்திய அரசு சட்டமாக வேண்டும் என்றும் ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.