Connect with us

ஆரோக்கியம்

வன்முறையாளராக மாறி வரும் குழந்தைகள் – ஆதரவற்ற பெற்றோர்

Published

on

இலண்டன் பிபிசியின் ஒரு அறிக்கையின்படி பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்கள் இன்று சுய பாதுகாப்பு குறித்த வகுப்புகளை தேடிச் சென்று சேர்வது தொடர்கதையாகிறது. தங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள அல்ல… தங்களுடைய குழந்தைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே!!!… ஐரோப்பா அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குழந்தைகள் தங்களுடைய பெற்றோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களில் காவல்துறையும் உடனடியாக தலையிட முடியாத சூழல்கள் காணப்படுகின்றன.

இந்தியாவும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் இங்கே இப்படியான சம்பவங்களை குடும்பத்திற்குள்ளேயே மறைத்து வைக்க பெரும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

இப்போதெல்லாம் தங்கள்து சொந்த குழந்தைகளால் அவதிப்படும் பெற்றோர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பல மடங்கு அதிகரித்து வருவது வேதனையான விஷயமாக மாறி வருகிறது. இதற்காக பெற்றோருக்கான புகலிடங்களாக பல்வேறு அமைப்புகள் உருவாகிவரும் சூழலும் காணப்படுகிறது.

குழந்தைகளால் பெற்றோர்கள் கொல்லப்பட்ட அரிதான நிகழ்வுகளும் நடந்துள்ளன. பெற்றோர்கள் கொடூர குழந்தைகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது இப்போதெல்லாம் இயலாத காரியமாக மாறி வருகின்றது.

இளம் தலைமுறையினருக்கு “சுதந்திரம்“ அதிகம் கிடைத்தால் தாய் தந்தையரின் அடக்குமுறையிலிருந்து காக்கும் பெயரில் பல இளைஞர்கள் தந்தையைத் தாக்குவது உலகம் முழுதும் பொதுவான சம்பவமாகிவிட்டது.

குழந்தைகளின் கையில் உள்ள மொபைல் போன் அவர்களுக்கு எல்லாவற்றையும் மிக எளிதாக காட்டுகிறது. வீடியோ கேம்கள் முழுவதுமாக போராட்டம், தாக்குதல், உயிர்க்கொல்லல் போன்ற காட்சிகளைக் கொண்டவை – அவை வெற்றி கொள்வது என்பது எதிரியை அழித்தால்தான் கிடைக்கும் என்ற எண்ணத்தை விதைக்கின்றன.

நாம் சொல்லிக் கொடுக்கும் குழந்தைப் பருவக் கதைகளில் கூட ராமாயணம், மகாபாரதம் போன்றவை வன்முறையை அழகுபடுத்தி மிகைப்படுத்தியே காட்டுகின்றன.

நம் நாட்டின் பெரும்பாலான வீரர்கள், தெய்வங்கள் என்று சொல்லப்படும் படங்களில் எல்லோரின் கையிலும் வாள் வேல் வில் ஆயுதம் இருக்கும்.

காந்தி அம்பேத்கார் போன்றவர்கள் ஆயுதமற்றவர்களாக விதி விலக்காகவே தெரிகிறார்கள்.

நகரங்களின் எந்த மூலையில் பார்த்தாலும் 4 முதல் 5 இளைஞர்கள் ஒன்றாகக் கூடி தாக்குதல் மிரட்டல் வன்முறை பற்றி பேசுவதை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. இதுவே பழக்கமாகி விட்டால் தவறல்ல என்ற நோக்கில் மெல்ல மெல்ல இறுதியில் குடும்பத்திற்குள்ளும் நுழைந்து விடுகிறது.

இணையத்தின் உலகத்திற்கான கதவை குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே முதலில் திறந்து வைக்கிறார்கள். அதற்கான விளைவுகளை அவ்வப்போது அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். குழந்தைகள் தவறான பாதையில் சென்றால் அதற்குரிய விலையை பெற்றோர்கள்தான் செலுத்த வேண்டியிருக்கிறது.

நமது குழந்தைகளிடத்தில் நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வெண்டிய நேரமிது. எச்சரிக்கையாக இருங்கள்… கவனமாக கையாளுங்கள்…

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா46 minutes ago

நேரத்தை விழுங்கும் மின்னஞ்சல்கள்

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.12.2025

இந்தியா7 மணி நேரங்கள் ago

பராசக்தியா? … ஜனநாயகனா?… – சபாஷ்! சரியான போட்டி!!!

சினிமா8 மணி நேரங்கள் ago

கர்நாடகாவைச் சேர்ந்த தமிழ் சின்னத்திரை நடிகை நந்தினி தூக்கு போட்டு தற்கொலை – “கெளரி“ தொடரில் இரட்டை வேடமிட்டு நடித்தவர்

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 30.12.2025

இந்தியா14 மணி நேரங்கள் ago

ஜனவரி 1 முதல் புதிய விதிகள் – ரூ.50,000-க்கு மேல் பேங்க் பரிவர்த்தனை செய்ய முடியாது?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 30 டிசம்பர் 2025: அமாவாசை, ரோகிணி நட்சத்திரம், சித்த யோகம் – சுப நேரங்கள் & சிறப்பு குறிப்புகள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ராசிபலன் 30.12.2025: செவ்வாய்க்கிழமை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

2026 குரு பூசம் நட்சத்திரம் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

2026 சனி-குரு மகா சம்யோகம்: எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருகிறது?

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்5 நாட்கள் ago

ஜனவரி மாத ராசிபலன் 2026: புத்தாண்டின் முதல் மாதத்தில் 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்5 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம்: கணவன்–மனைவி சேர்ந்து மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு | முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

உலகின் மிக வலிமையான நாணயம் எது? டாலரையும் மிஞ்சும் குவைத் தினாரின் அதிர்ச்சி உண்மைகள்!

வணிகம்5 நாட்கள் ago

இனி தங்க நகைக் கடனுக்கு கிடைக்கும் தொகை குறையும்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO 3.0 Latest Update: EPF பணம் எடுப்பதில் பெரிய மாற்றங்கள் | புதிய விதிகள் முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

இயற்கை முறையில் கொய்யா மரம் வளர்ப்பது: மண் தேர்வு, செடி நடவு, நீர்ப்பாசனம் மற்றும் உரம்!

வணிகம்4 நாட்கள் ago

Aadhaar PAN Link Status: டிசம்பர் 31க்குள் ஆதாருடன் பான் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்? ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி?

வணிகம்5 நாட்கள் ago

மீண்டும் சர்ரென உயரும் தங்கம் விலை!(25-12-2025)!

இந்தியா3 நாட்கள் ago

திரைப்படத்தில் புதுமை… முகமற்ற வார்த்தைகள் அற்ற உலகின் முதல் திரைப்படம் ”மெட்டா”

வணிகம்5 நாட்கள் ago

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாளை அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை | குஷியான அறிவிப்பு வருமா?

Translate »