ஆரோக்கியம்
தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய கடிவாளம்

பெரிய மருத்துவமனைகளில் ஐசியுவில் இருக்கும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை முறைகளில் ஒன்றான வென்டிலேட்டல் வைத்து சுவாசிக்க செய்தல் தற்போதைய கால கட்டத்தில் அதிகம் நடைமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணக் கொள்ளை பல சமயங்களில் நோயாளிகளை மட்டுமல்ல உடன் வந்திருப்பவர்களையும் திக்கு முக்காடவைக்கிறது என்று சொன்னால் மிகையேதும் இல்லை.
இந்த வென்டிலேட்டர் சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனைகளில் நிலவும் தன்னிச்சையான நடைமுறைகள் மற்றும் அதிகப்படியான கட்டண வசூலை மட்டுப்படுத்தும் விதத்தில் ஒன்றிய அரசின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி மருத்துவமனைகள் இனி நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ஐசியு மற்றும் வென்டிலேட்டர் சிகிச்சையின் முழு செலவு குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பாகவே குடும்பத்தினரிடமிருந்து எழுத்துப் புர்வமான ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாகிறது.
- தெளிவான தகவல்கள் தெரிவித்துஒப்புதல் பெற வெண்டும்.
- தினசரி செலவுகளைத் தெரிவிக்க வேண்டும்.
- ஒரேசீரான கட்டண விகிதங்களை பின்பற்ற வெண்டும்.
- கட்டண விகிதங்களை பொதுமக்கள்பார்வைக்கு வைக்க வேண்டும்.
- வென்டிலேட்டர்கள் பயன்பாடுகள் அடிப்படையில் பில்போட வேண்டும்.
- 48 முதல் 72 மணி நேரம் வரை வென்டிலேட்டர்சிகிச்சைக்கு காலவரையறை.
- 14 நாட்களுக்கு பின்னர் சிறப்புக் கண்காணிப்பு
புதிய வழிகாட்டுதல்கள் படி தனியார் மருத்துவமனைகள் ஒரு குறிப்பிட்ட கால கெடுவிற்குள் குறைதீர்க்கும் அமைப்பை நிறுவ வேண்டும்.
நோயாளிகளின் குடும்பங்கள் பில்லில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது வெளிப்படைத் தன்மை இல்லாததைக் கண்டால் அவர்கள் முறையான புகாரைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவர்.
இதுபற்றி அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “தனியார் சுகாதார அமைப்புகளில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்ற அரசு விரும்புகிறது. மிக மோசமான நிலையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும்போது அதை மருத்துவ சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதைப் பயன்படுத்தி அவர்களின் நிதிவளத்தை சுரண்ட நினைக்கக்கூடாது. 14 நாட்களுக்கு மேலாக ஒருவரை வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கும்போது அரசின் ஆய்வுக்காக ஒவ்வொருவருக்கும் அது தொடர்பான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்“ என்றார்.
இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்தவுடன் அவை நோயாளிகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வணிக ஆதாயத்துக்கு அல்லாமல் மருத்துவத் தேவைக்காக வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியும்.











