Connect with us

இந்தியா

6வது ஊதிய குழுவில் லட்சக்கணக்கில் பலன்கள்: ஓய்வு பெற்ற மூதாட்டியை ஏமாற்றி ரூ.10 லட்சம் மோசடி..!

Published

on

6வது ஊதிய குழுவில் ஓய்வு பெற்றவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பலன்களை கிடைப்பதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆன மூதாட்டி ஒருவரிடம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் ஓய்வு பெற்ற பின் தனது ஓய்வூதிய பணத்தை வைத்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு பிப்ரவரி 16ஆம் தேதி தெரியாத மொபைல் எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய பெண் புதுடெல்லியில் உள்ள கிராஜுவெட்டி மற்றும் பிராவிடண்ட் பண்ட் அலுவலகத்தின் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

மேலும் இந்த அலுவலகம் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்கிறது என்றும் அவரது வங்கி கணக்கில் ரூபாய் 4.86 லட்சம் ரூபாய் கிரெடிட் பெற உரிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த பெண் மூதாட்டியிடம் இனிய முறையில் பேசி சில விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய செய்தார். அதன் பிறகு அவர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு சில தொகைகள் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முதலில் சந்தேகப்பட்டாலும் அதன் பின் அந்த பெண் தனது முதலாளியுடன் பேச வைக்கிறேன் என்று கூறியுள்ளார். 6வது ஊதிய குழு மூலம் அவருக்கு லட்ச கணக்கில் வருமானம் கிடைக்கும் என்றும் அதற்காக நான்கு படிவங்களை மட்டும் பூர்த்தி செய்து ஒரு சில கட்டணங்களை செலுத்தினால் போதும் என்றும் அவரது முதலாளி என்று கூறப்பட்டவர் இனிமையாக பேசியுள்ளார்.

இதனை அடுத்து பிப்ரவரி 16 முதல் 22 வரை அந்த மூதாட்டி சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து தான் அந்த மூதாட்டிக்கு திடீரென சந்தேகம் எழுந்ததை அடுத்து காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 34 (பொது நோக்கத்திற்காக பலர் செய்த செயல்கள்), 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்தை வழங்குதல்), பிரிவுகள் 66C (அடையாளத் திருட்டு) மற்றும் 66D ((ஏமாற்றுதல்) ஆகிய பிரிவாரின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் நிறுவனத்தின் சட்டம் தொடர்புடைய பிரிவுகளை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.0

வேலைவாய்ப்பு6 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா6 hours ago

விக்ரமின் ‘தங்கலான்’ பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டம்!

சினிமா6 hours ago

‘பொன்னியின் செல்வன்2’: குந்தவைக்கு ட்வீட் செய்த வந்தியத்தேவன்!

சினிமா6 hours ago

மனைவியுடன் ஜாலி டூர் கிளம்பிய அஜித்! அப்போ ஏகே 62 அப்டேட் அவ்ளோ தானா?

சினிமா6 hours ago

பான் வேர்ல்ட் படமாகும் தங்கலான்; பா. ரஞ்சித்தின் மாஸ்டர் பிளான்!

சினிமா7 hours ago

அகநக அகநக முகநகையே! வெளியானது பொன்னியின் செல்வன் 2 பாடல்!

இந்தியா9 hours ago

மாணவியை காதலித்து திருமணம்.. ரூ.189000 கோடி நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர்..!

உலகம்9 hours ago

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

சினிமா10 hours ago

ரஜினியுடன் நடிக்க விரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்!

தமிழ்நாடு11 hours ago

எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில்… விளாசிய டிடிவி தினகரன்!

உலகம்7 days ago

சொந்த நாட்டில் வங்கி திவாலானது கூட தெரியாமல் என்ன செஞ்சீங்க? ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

சினிமா6 days ago

’நாட்டு நாட்டு’ நல்ல பாடலே இல்லை.. எல்லாமே லாபி.. இளையராஜா ரசிகர்கள் விளாசல்!

இந்தியா7 days ago

அதிக சம்பளத்தில் வேலை வேண்டாம்.. ராஜினாமா செய்து குறைந்த சம்பளத்திற்கு செல்லும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 days ago

சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?

இந்தியா6 days ago

முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

சினிமா6 days ago

இனிமே பிரியங்கா மோகன் பக்கமே வரக்கூடாது; மனைவி போட்ட உத்தரவு நடிகையை மாற்றும் சிவகார்த்திகேயன்?

வணிகம்6 days ago

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா (15/03/2023)!

வணிகம்7 days ago

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா(14/03/2023)!

உலகம்7 days ago

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் விற்க முடியுமா? எவ்வளவுக்கு வாங்குவார்கள்?

இந்தியா6 days ago

3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!