Connect with us

இந்தியா

ஐதராபாத் என்கவுன்ட்டர் போலியானது: 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய பரிந்துரை!

Published

on

ஐதராபாத்தில் 4 பேர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டது போலியானது என்றும் இதனை அடுத்து 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் விசாரணை குழுவ உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நெடுஞ்சாலையில் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த குற்றம் சம்பந்தமாக 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை விசாரணை செய்தபோது திடீரென என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த என்கவுண்டருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இந்த என்கவுண்டர் போலியானது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விரிவாக விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்தது.

இந்த விசாரணையின் முடிவில் இந்த என்கவுன்டர் முழுக்க முழுக்க போலியானது என்றும் நான்கு பேரையும் கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே என்கவுண்டர் செய்யப்பட்டது என்றும் கூறி இந்த என்கவுண்டர் குறித்து 10 போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளது.

இந்த அறிக்கையின் பரிந்துரையின் படி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?