Connect with us

தமிழ்நாடு

உடலுறவின்போது உடைந்த ஆண்குறி: தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு!

Published

on

உடலுறவின் போது ஆண் குறி உடைந்து விட்டதை அடுத்து தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் சென்னையில் தங்கி பழைய இரும்புகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் 20 வயது பெண் ஒருவருக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் தம்பதிகள் மதுரவாயில் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென இந்த தம்பதியின் வீடு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் அடைந்து கதவை தட்டினார்கள். ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை என்பதால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மனைவி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

தனை அடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்கொலைக்கு முன்னர் தம்பதிகள் இருவரும் சேர்ந்து எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் உடலுறவின் போது ஆண்குறி நரம்பு உடைந்து போனதால் எங்களால் குழந்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் எங்கள் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இருவரும் கையெழுத்திட்டனர்.

மனைவியுடன் உடலுறவு கொண்டபோது கணவரின் ஆண் குறி நரம்பு உடைந்து விட்டதால் அதன் பிறகு அவரால் உடலுறவு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவமனையை அணுகி தகுந்த சிகிச்சை செய்யாமல் அவர்களாகவே குழந்தை பிறக்காது என்று முடிவுசெய்து மன உளைச்சலில் இந்த திடுக்கிடும் முடிவை எடுத்துள்ளனர். திருமணமான 5 மாதத்தில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?