Connect with us

இந்தியா

சர்வதேச கவனத்தை பெற்ற விவசாயிகள் போராட்டம்: ஹாலிவுட் நடிகை ஆதரவு!

Published

on

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன

சமீபத்தில் குடியரசு தினத்தின் போது விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தியதில் வன்முறை ஏற்பட்டதில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒருசில விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் இருந்து விலகினாலும் பெரும்பாலான சங்கங்கள் தற்போதும் போராட்டம் நீடித்து வருவதாக அறிவித்துள்ளனர்.

Rihanna

Rihanna

இந்த நிலையில் சர்வதேச கவனத்தை விவசாயிகள் போராட்டம் பெற்றுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ரிஹான்னா தனது டுவிட்டரில் விவசாயிகள் போராட்டம் குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். நாம் ஏன் இந்த போராட்டம் குறித்து பேசவில்லை? என்று அவர் விவசாயிகள் போராட்டம் குறித்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு உள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகை ரிஹான்னாவின் இந்த கருத்தை பலர் ஆதரித்தும் ஒரு சிலர் மட்டும் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ஏற்கனவே கனடா பிரதமர் உள்பட சர்வதேச அரசியல் தலைவர்கள் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசி உள்ள நிலையில் தற்போது ஹாலிவுட் நடிகை ஒருவரும் இது குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதிலும் குறிப்பாக 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ள ஒரு ஹாலிவுட் நடிகை தனது டுவிட்டரில் விவசாயிகள் போராட்டம் குறித்து பதிவு செய்திருப்பதால் உலகின் கவனத்தை விவசாயிகள் போராட்டம் பெற்றுள்ளதாகவும் உடனடியாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?