தமிழ்நாடு
உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் நாடு திரும்பும் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்
உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்கும் செலவு அனைத்தையும் தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் கடுமையாக நடந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் மெட்ரோ ரயில் நிலையம் உள்பட பாதுகாப்பான பகுதிகளில் பதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் சிக்கி உள்ளதாகவும் அதில் தமிழக மாணவர்கள் மட்டும் சுமார் 5,000 பேர் சிக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.