இந்தியா
முள்ளம்பன்றி போல் இருக்கும் அரசு அதிகாரியின் கையெழுத்து: நெட்டிசன்கள் கிண்டல்!
அரசு அதிகாரியின் கையெழுத்து ஒன்று முள்ளம்பன்றி போல் இருப்பதை அடுத்து நெட்டிசன்கள் அதனை கிண்டல் செய்து வருகின்றனர்.
ஒருவரின் கையெழுத்து எப்படி இருக்கிறதோ அதுபோல் தான் அவருடைய தலையெழுத்து இருக்கும் என்று கூறினாலும் பெரும்பாலான அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் ஆகியோர்களின் கையெழுத்து புரியாமல் தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் எலும்பியல் துறையில் பணியாற்றும் ஒருவர் போட்ட கையெழுத்து தான் தற்போது நெட்டிசன்கள் இன் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.
அவருடைய எழுத்துகளில் முள்ளம்பன்றி உள்ளது என்பதும் அந்த கையெழுத்தில் எந்த ஒரு மொழியின் எழுத்தும் இல்லை என்றும் தெரிகிறது. இது அவரது கையெழுத்தா? அல்லது கோடுகள் போட்ட கிறுக்கல்களா? என்று விவாதங்கள் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது .
மீண்டும் ஒருமுறை இதேபோன்ற கையெழுத்தை போட முடியுமா என்றும் கண்டிப்பாக முடியாது என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அரசு அதிகாரிகள் தங்கள் கையெழுத்துக்களை பொறுப்புடன் போட வேண்டும் என்றும் இப்படி முள்ளம்பன்றி போன்ற பொறுப்பில்லாமல் கையெழுத்துப் போடுவது அவர்களுடைய பதவிக்கு இழுக்கு என்றும் ஒரு சிலர் அறிவுறுத்துகின்றனர் .
மொத்தத்தில் ஒரு அரசு அதிகாரியின் கையெழுத்து இணையதளத்தில் பேசும்பொருள் ஆகும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.