இந்தியா
அடுத்த 6 மாதத்தில் 1000 கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

அசாமில் குறைந்த வயதில் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது அதிகமாக உள்ளதைக் குறைக்க, அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி, அசாமில் குறைந்த வயதுடைய பெண்களைத் திருமணம் செய்துகொண்ட ஆண்கள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்சோவின் கீழ் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#image_title
14 வயதுக்கும் குறைந்துள்ள பெண்களுடன் உறவுகொள்வது அவர் கணவராக இருப்பினும் அது குற்றம். பெண்களுக்கான அதிகாரப்பூர்வ திருமண வயது 18 ஆக இருந்த போதும் அசாமில் பலர் குறைந்த வயதுடைய பெண்களைத் திருமணம் செய்துள்ளார்கள்.
அவர்களைச் சட்ட ரீதியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் 22 முதல் 30 வயதுக்குள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே மகப்பேறுவுக்கான சரியான காலம். குறைந்த வயதில் பெண்கள் மகப்பேறுவை சந்திக்கக் கூடாது. அதே நேரம் நீண்ட காலமும் தள்ளிப்போடக் கூடாது. கடவுள் நமது உடலை எல்லாவற்றிற்கும் பொருத்தமான வயது இருக்கும் வகையில் படைத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
அசாம் அரசு எடுக்கும் இந்த முடிவால் அங்கு அதிகளவில் ஏற்பட்டு வரும் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் கட்டுக்குள் அவரும். அதற்குப் பெண்களின் திருமண வயதும் முக்கிய காரணமாக உள்ளது. அசாமில் சராசரியாக 31 சதவீத திருமணங்கள் தடைசெய்யப்பட்ட வயதில் நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.