சினிமா
இருட்டு அறையில் கஜினிகாந்த்

சமீபத்தில் நடந்த ‘கஜினிகாந்த்’ பட விழாவில் நடிகர் ஆர்யா இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் திறமை பற்றி வியந்து பேசியுள்ளார்.
‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற படங்களை இயக்கிய இளம் இயக்குநர் திரு சந்தோஷ் பி. ஜெயக்குமார். இப்படங்கள் இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும் பல தரப்பிலுமிருந்து எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானது. எனினும் இளைஞர்களின் ஆதரவால் நன்றாகவே லாபம் ஈட்டியது.
அடுத்ததாக அவர் ஆர்யா, சாயிஷாவை வைத்து இயக்கிய ‘கஜினிகாந்த்’ திரைப்படம் கூடிய விரைவில் வெளிவரவுள்ளது. இந்த படத்தை ‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். அப்பட விழாவில் ஆர்யா கீழ்க்கண்டவாறு சந்தோஷை புகழ்ந்துள்ளார்.
“பகலில் கஜினிகாந்த்தும் இரவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ம் என விடாமல் ராப்பகலாக சந்தோஷ் படங்கள் இயக்கியிருக்கிறார். ஒரு நடிகருக்குக் கூட ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் செய்வது கடினமில்லை; ஆனால் இயக்குநருக்கு அது மிகக் கடினமான விஷயம். அந்த வகையில் அவர் உழைப்பைக் கண்டு நான் வியக்கிறேன்” என்றார்.
சந்தோஷ் தன் படங்கள் சார்ந்த வேலைகளைத்
திட்டமிடுவதைக் கூட வாட்சாப்பில் செய்து வேலையை சுலபமாக்குகிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.



















