Connect with us

இந்தியா

சொகுசு பங்களாவில் போதை விருந்து: நடிகைகள், பிக்பாஸ் போட்டியாளர்கள் சிக்கியதால் பரபரப்பு!

Published

on

சொகுசு பங்களா ஒன்றில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக கேள்விப்பட்ட காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தபோது பிக்பாஸ் போட்டியாளர்கள், தென்னிந்திய நடிகைகள் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற நகரில் உள்ள சொகுசு பங்களா ஒன்றில் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திடீரென போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அந்த பங்களாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்தை அந்த விருந்தில் பயன்படுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து போதைப்பொருள் பயன்படுத்திய 22 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் பிக்பாஸ் போட்டியாளர் என்றும் நான்கு பேர் தென்னிந்திய நடிகைகள் என்றும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதன் பின் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விருந்தை ஏற்பாடு செய்த நைஜீரிய பெண் ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் விருந்து விவகாரத்தில் தென்னிந்திய நடிகைகள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?