சினிமா
‘கேள்விப்பட்டதெல்லாம் சரிதான்’: முதன்முறையாக பொதுவெளியில் உண்மையை ஒத்துக் கொண்ட விக்னேஷ் சிவன்!
கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான் என்பதை இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
தமிழில் ‘நானும் ரவுடிதான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். கடந்த ஆண்டு இவர் நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார் எனவும், நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போதே தகவல் வெளியானது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தின் 62-வத்ய் படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாகவும் இதற்கு காரணமாக தயாரிப்பு தரப்பில் படத்தின் கதை திருப்தி தராதது முக்கிய காரணம் எனவும் சொல்லப்பட்டது. அஜித்துடன் விக்னேஷ் சிவன் படம் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கும் மேல் ப்ரீ புரொடக்சன் பணிகளுக்கு நேரம் கொடுத்திருந்தும், விக்னேஷ் சிவன் கதையில் சரியாக கவனம் செலுத்தாததும் ஒரு முக்கிய காரணம். இதனால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனை அனை அடுத்து இந்த திரைப்படம் மகிழ்திருமேனிக்கு சென்றது. இது குறித்து தயாரிப்பு தரப்போ விக்னேஷ் சிவன் தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லாமல் இருந்தார்கள். ஆனால், இப்பொழுது சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இதை ஒத்துக் கொண்டுள்ளார். லைகா தரப்பில் தான் உருவாக்கிய கதையின் இரண்டாம் பாதியில் திருப்தி தராததால் தான் அந்த படத்தில் இருந்து எனகக இதற்கும் அஜித்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அஜித்தின் 62வது படம் மகிழ்த்திருமேனி போன்ற இயக்குநர் கையில் சென்றது தனக்கு மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஜித்தின் 62வது படம் மகிழ்த்திருமேனி போன்ற இயக்குநர் கையில் சென்றது தனக்கு மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஜித்தின் 62-வது படத்தை இயக்கும் வாய்ப்பு கைநழுவி போனது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்பதையும் வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் தற்பொழுது தன்னுடைய ஆறாவது படமாக பிரதீப் ரங்கநாதனை மற்றும் நயன்தாராவை வைத்து இயக்க என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.