Connect with us

இந்தியா

தேர்தல் கால பறக்கும் படையிடம் சிக்கும் அப்பாவி பொதுஜனம்… அந்தோ…பரிதாபங்கள்…!!!

Published

on

தமிழகம் முழுதும் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்துள்ளார்களாம்! தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.  தெரிவித்துள்ளார்…!

அரசியல்வாதிக்கு அஞ்சா பறக்கும் படை வீரர்கள்..!

என்று பாராட்டத்தான் தோன்றுகிறது.

ஆனால், யதார்த்தத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இப்படி பறிமுதல் செய்வது, பெரும்பாலும் அப்பாவி மக்களிடம் இருந்து தான் என்ற உண்மை சுடுகிறது.

தமிழகம் முழுக்க தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகளாம்!

9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்களாம்!

அரசியல்வாதிகள் இதற்கெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களின் கொண்டாட்டத்தில் எதுவும் குறையப் போவதுமில்லை. ஆனால், சாதாரண மக்கள், வியாபாரிகள், சம்சாரிகள் பாடு தான் இன்னும் கொஞ்ச நாளைக்கு திண்டாட்டமோ, திண்டாட்டம்!

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் நான் பார்த்த, என் கவனத்திற்கு வந்த பல விவகாரங்கள் என்னுள் என்னென்ன பதற்றங்களை, ஆற்றாமைகளை, கொந்தளிப்புகளை எல்லாம் ஏற்படுத்தின.. என்று நினைத்துப் பார்க்கிறேன்…!

மகளின் கல்யாணத்திற்காக 25 ஆண்டுகளாக சிறுகச் சிறுக சேகரித்து நகை வாங்கித் திரும்பிய அந்த எளிய தந்தை பறக்கும் படையினரிடம் நகையை பறி கொடுத்து, அலையாய் அலைந்து, கண்ணீர் உகுத்தும் கடைசி வரை திரும்பப் பெற முடியவில்லை…

அவர் நகை வாங்கிச் சென்றது நேரடியாக நகை செய்யும் ஆச்சாரியிடம்! பெரிய நகைக் கடையிடமிருந்து வாங்கி இருந்தால் ரசீது கட்ட முடியும்! கிராமத்து மக்கள் சிறிய நகைப் பட்டறை வைத்திருக்கும் ஆச்சாரிகளிடம் பாரம்பரியமாக நகை வாங்கிச் செல்வார்கள்- மிக நியாயமான விலைக்கு…! எந்த ரசீதும் தரமாட்டார்கள்!

சந்தைக்கு சென்று ஆடு, மாடு விற்று திரும்பிய நிலையில் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட படிப்பறிவில்லாத ஏழை கிராமத்து பாமரப் பெண்கள் இருவர் எவ்வளவு அழுது புரண்டும் பணத்தை திரும்பப் பெற முடியாமல், மண்ணை வாரி இறைத்து சாபமிட்டு சென்ற காட்சியை மறக்க முடியுமா?

நேற்று திருவள்ளுர் மாவட்டத்தில் திருமணத்திற்காக பழைய நகைகளை ரிப்பேர் செய்ய 25 சவரன் நகைகளையும் புதிய நகை வாங்க இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும் எடுத்துச் சென்றவர்கள் இவர்களிடம் சிக்கிக்கொண்டு கல்யாணப் பெண்ணும் மிடில் கிளாஸ் பெற்றோரும் எவ்வளவோ கண்ணீர் விட்டு கதறியும் இவர்களின் அதிகார மனங்கள் இளகவில்லை.

’’அண்ணே வயலில் விளைந்த காய்கறிகளை மொத்த மார்கெட்டில் விற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். பணத்தை மடியில கட்டி வச்சுறுந்தேன். மொத்த பணத்தையும் பகல் கொள்ளைக்காரன் போல பறிச்சுட்டாங்க.., கேட்டா பறக்கும் படையிங்கிறாங்க.. என் வேர்வையெல்லாம் வீணாச்சு, பயிர்க்கடனை எப்படி கட்டுவேன்னு தெரியலைண்ணே..’’ என்று அழுத விவசாயியின் குரல் நினைவில் வருகிறது.

மகனின் படிப்புக்காக பரிட்சைக்கு பணம் கட்டினால் தான் நாளை பரிட்சை எழுத அனுமதிப்பார்கள் என்ற நிலையில் கந்து வட்டிக்காரரிடம் கடன் வாங்கித் திரும்பிய நிலையில், பறக்கும் படையிடம் பிடிபட்டு கந்தலாகிப்  போன அந்த ஏழைத்தாயின் கதறலைச் சொல்வதா..?

மேற்படி நான் சொன்னவை எல்லாம், பல்லாயிரக்கணக்கான எளிய மனிதர்கள் சிறு, குறு வியாபாரிகள், சிறு தொழில் செய்வோர், குடும்பஸ்தர்கள் தற்போது அனுபவித்து வருகின்ற துன்பத் துயரங்களின் ஒரு சில துளிகளே..!

அதிகாரிகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் இந்த குறுகிய காலகட்டத்தில் இப்படி எத்தனையெத்தனையோ குரூரங்களை நடத்தி விடுகிறார்கள்!

பிடிபட்ட பணத்தின் மதிப்பையும், பிடிபட்ட நகைகளின் மதிப்பையும் ஊடகங்களிடம் வெளிப்படுத்தி பீற்றிக் கொள்வதில் இவர்களுக்கு தான் எவ்வளவு பெருமிதம்!

இதே காலகட்டத்தில் தான் பிரபல கட்சிகளின் அரசியல்வாதிகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் திட்டமிட்டு தர வேண்டிய பணத்தையும், பொருட்களையும் கச்சிதமாக கைசேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களிடம் மட்டும் இந்த பறக்கும் படை பம்மிக் கொள்ளுமா? இல்லை, பாராமல் செல்லுமா? தெரியவில்லை. பல நேரங்களில் மக்களே குற்றங்களை பறக்கும் படையினர் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் கூட, எதுவும் நடக்காத சூழல்களையும் பார்க்கிறோம்…!

ஜனநாயகம் மலர வேண்டும்என்பதற்காகத் தான் தேர்தல் நடத்துகிறார்கள்! ஆனால், தேர்தல் காலகட்டம் என்பது அதிகாரிகளின் சர்வாதிகாரம்கொடி கட்டிப் பறக்கும் காலகட்டமாகும்!

பெரிய, பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் பணிவோடு எளிய மக்களிடம் கும்பிடு போட்டு மக்களை ஆணையிடச் சொல்லி, மன்றாடுகின்ற இந்த காலகட்டத்தில் தான், எளிய மக்கள் அதிகாரிகளிடம் சின்னாபின்னப்பட்டு சீரழிகிறார்கள்!

மக்களே கவனம் கொள்ளுங்கள். உழைத்து சேகரித்த பணத்தையோ, நகைகளையோ, பொருட்களையோ கொண்டு செல்லும் போது பறக்கும் படைக்கு பலியாகிவிடாதீர்கள்!

 

ஐயா, அதிகாரி துரைமார்களே!

மனசாட்சிப்படி நேர்மையாகச் செயல்படுங்கள்!

பாமர மக்களிடம் கொஞ்சம் பரிவு காட்டுங்கள்!

எளியோரிடம் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்!

சிறு,குறு வியாபாரிகளின் சிரமங்களை கருத்தில் கொள்ளுங்கள்!

நியாயம் என மனதிற்குப் பட்டால், விட்டு விடுங்கள் புண்ணியமாகும்!

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை 2026: மகாலட்சுமி ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு!

வணிகம்4 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சுக்கிரன் கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி 2026: மாளவ்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு செல்வம் & காதல் வெற்றி!

வணிகம்4 மணி நேரங்கள் ago

டிஏ உயர்வு 2026: 60% வரை அகவிலைப்படி – சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 நல்ல செய்திகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழு பலன் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா22 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Start using the free link building tool today by installing the wordpress plugin. Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes.