உலகம்
டுவிட்டரை வாங்கும் முடிவில் திடீரென பின்வாங்கிய எலான் மஸ்க்: என்ன காரணம்?
பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை நாற்பத்தி நான்கு பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென டுவிட்டரை வாங்கும் முடிவில் இருந்து எலான் மஸ்க் பின் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது .
டுவிட்டரில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் இருக்கும் நிலையில் அந்த பயனாளர்களில் 5% போலி கணக்குகள் என தெரியவந்துள்ளது. ட்விட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5% போலி கணக்குகள் என்பதால் அந்த நிறுவனத்தை நாற்பத்தி எட்டு பில்லியன் கொடுத்து வாங்குவதற்கான தகுதி இல்லை என அவருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து டுவிட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள்ளதாகவும் இன்னும் டுவிட்டர் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னரே டுவிட்டரை வாங்கும் முடிவை அவர் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
டுவிட்டரை வாங்கும் முடிவில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியதால் டுவிட்டர் ஊழியர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும் பயனாளர்கள் டுவிட்டரை அவர் வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.