தமிழ்நாடு
1-9 வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு: எத்தனை நாட்கள்?
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறையை சற்றுமுன் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வு தேதி அறிவிக்கப் பட்டது என்பதும் தேர்வு வரை மாணவர்கள் பள்ளிக்கு வர தேவை இல்லை என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.
கோடை வெயில் கடுமையாக குறித்தும் காரணத்தினால் பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்வுக்குப் பின் கோடை விடுமுறை மே 14ஆம் தேதி முதல் அளிக்கப்படுவதாகவும், மீண்டும் பள்ளி ஜூன் 13ஆம் தேதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கிட்டத்தட்ட ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாணவர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.