Connect with us

தமிழ்நாடு

மே மாதம்.. மதுரை.. நாள் குறித்த எடப்பாடி பழனிசாமி.. சிங்கப்பாதையில் செல்லும் அதிமுக 2.0

Published

on

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்த டிசம்பர் – ஜனவரி மாதம் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய மோதல் இத்தனை மாதங்கள் கழித்து இப்போதுதான் முடிவிற்கு வந்து உள்ளது. ஒரு வழியாக அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அந்த பொதுக்குழு வழக்கில் 3 முக்கிய அம்சங்கள் சொல்லப்பட்டு உள்ளன.

1. அதிமுக பொதுக்குழு நடந்தது செல்லும்.

2. அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும். அதாவது ஓ பன்னீர்செல்வம் இப்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை.

3. அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்தான் இப்போது ஒற்றை தலைமை.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவர் பெரிய அளவில் அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். விரைவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆக உள்ள அவர் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவிப்பார். ஏப்ரல் இறுதிக்குள் தேர்தலில் போட்டியின்றி எடப்பாடி வெல்வார். அதன்பின் மே மாதம் பொதுக்கூட்டம் நடக்கும் என்கிறார்கள்.

#image_title

இந்த பொதுக்கூட்டம் மதுரையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் வலிமையாக இருக்கும் எடப்பாடி தென் மண்டலத்தை குறி வைத்து இந்த பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளாராம். அதிமுக தனக்கு கீழ் வந்துவிட்டதை அறிவிக்கும் விதமாக மிகப்பெரிய அளவில் அவர் இந்த கூட்டத்தை நடத்த போவதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் பலர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?