இந்தியா
இலங்கை நிலை நமக்கும் வரலாம்: பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்
இலங்கை நிலைமை இந்தியாவிற்கும் வர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் எச்சரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .
மாநிலங்கள் பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்த வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் இலங்கை நிலைமை இந்தியாவிற்கும் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியுடன் எச்சரித்து உள்ளனர்.
எனவே மாநில அரசுகள் இலவசங்களை உடனடியாக நிறுத்த மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் கூறும்போது இலங்கையின் நிலை தமிழகத்தில் விரைவில் வர வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத்தின் பொருளாதார நிலையை மிகவும் அபாயகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார் .
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் பலர் இந்தியா உட்பட பல்வேறு நாடு அகதிகளாக சென்றுள்ளனர். அந்த நிலைமையை தமிழகம் உள்பட இந்தியாவுக்கும் வருமென்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.