Connect with us

தமிழ்நாடு

முதல்வர் இவ்வளவு விவரமற்றவராக இருப்பார் என நினைக்கவில்லை: துரைமுருகன் அட்டகாசம்!

Published

on

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும் அவருக்கு தொடர்புடையவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர் இதனை காரணம் காட்டி அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி சூலூரில் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேலூரில் திமுக சார்பாக நிறுத்தப்பட்ட துரைமுருகனின் மகனின் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது மூக்குத்தி, கால் பவுன், அரை பவுன் என 12 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். 13 கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாக எடுத்தார்கள். அனைத்தும் புது 200 ரூபாய் நோட்டுக்கள். கிடைத்தது 13 கோடி, கிடைக்காதது எத்தனை கோடி என்று தெரியவில்லை. 8 வருடம் ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றால், ஆட்சியில் இருந்திருந்தால் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார். அதில், இதுதொடர்பாக வந்த செய்தியை பார்த்தபோது எடப்பாடி பழனிசாமியை பார்த்து பரிதாபப்படுவதா, சிரிப்பதா அல்லது ஆத்திரப்படுவதா என்று தெரியவில்லை. முதலமைச்சர் இவ்வளவு விவரம் அற்றவராக இருப்பார் என்று நினைக்கவில்லை. அவர் கூறியது அனைத்தும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

எங்களது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டபோது, அவர்கள் எடுத்துச் சென்றது 10 லட்சம் ரூபாய் மட்டுமே. முதல்வரின் கூற்றுப்படி 13 கோடி ரூபாய் அல்ல. ரூ.13 கோடி எடுத்த இடமும் எங்களுக்கு உரியது அல்ல. 12 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் எடப்பாடி கூறுகிறார். ஆனால் சோதனையில் எங்கும் தங்கம் கைப்பற்றப்படவில்லை. இதுதான் உண்மை. வருமான வரித்துறை கொடுத்துள்ள பஞ்சன்நாமாவைப் பார்த்தாலே இது தெரியும்.

எல்லாவற்றையும் அறிந்துகொள்ளக் கூடிய இடத்தில் அமர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதுவும் தெரியாத சராசரி மனிதரைப் போல பேசியிருப்பது கேலிக்குரியதாகும். எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கமும், 13 கோடி ரூபாய் பணத்தையும் வருமான வரித்துறை கைப்பற்றியதாக முதல்வர் நிரூபித்தால், நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா என சவால் விடுத்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

10 நவம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம்: நல்ல நேரம், ராகு காலம், யமகண்டம் மற்றும் இன்று சிறப்பான யோகம் விவரங்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

நவம்பர் 7, 2025 தசாங்க ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்கள் பெறும் அதிர்ஷ்ட நன்மைகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

நவம்பர் 16 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 ராசிக்காரர்கள் பெறும் அதிர்ஷ்ட நிதி பலன்கள்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கேரட் ஜூஸில் இதைச் சேர்த்து குடித்தால் கிடைக்கும் அசரீர நன்மைகள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவர்கள் யார்? இந்த 4 ராசிக்காரர்கள் எங்குச் சென்றாலும் மரியாதை பெறுவார்கள்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

உடல் எடை குறைக்க ரவை நல்லதா? முழு கோதுமை மாவா? — நிபுணர்கள் கூறும் உண்மை!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராகு-சுக்கிர நவபஞ்சம ராஜயோகம்: பண மழையில் நனையும் இந்த மூன்று ராசிக்காரர்கள்!

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

1 மாதம் கெடாமல் இருக்கும் கார சட்னி ரெசிபி – இட்லி, தோசை, சாதத்துக்கும் பொருத்தமான சுவை!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

அனுஷ நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மிளிரும் காலம்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு? போனஸ், கிராச்சுவிட்டி, ஓய்வூதியத்தில் பெரும் நன்மைகள்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய மாற்றம்: ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 இலிருந்து ரூ.25,000 ஆக உயரவுள்ளது – கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு நன்மை!

வணிகம்6 நாட்கள் ago

ரிசர்வ் வங்கியின் புதிய நகை கடன் விதிகள்: தங்கத்துடன் வெள்ளியையும் அடமானம் வைத்து கடன் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நன்மைகள் – சம்பள உயர்வோடு ஓய்வூதிய மாற்றங்களும்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 03 நவம்பர் 2025: இன்று நன்னேரம், ராகு காலம், யமகண்டம் மற்றும் திதி விவரங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 12% அல்ல 186% வரையிலும் சம்பள உயர்வு? முழு விளக்கம் இங்கே!

செய்திகள்7 நாட்கள் ago

bet365 bonus password NYPBET: Choice $5, get $2 hundred in the extra wagers winnings or lose to have Tigers against Guardians

செய்திகள்7 நாட்கள் ago

Boylesports British Sportsbook & Gambling establishment Opinion 2025 Would it be Safe?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

இந்திய ரயில்வேயில் 2,569 பணியிடங்கள் – டிப்ளமோ & பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

இந்தியா5 நாட்கள் ago

அசைவ உணவு தடை செய்யப்பட்ட உலகின் முதல் நகரம் – குஜராத்தின் புனித நகரமான பாலிதானாவின் சிறப்புகள்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 750 வங்கி அதிகாரி வேலை வாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

Translate »