ஆரோக்கியம்
மருந்து எதிர்விளைவுகள் குறித்து தகவல் அளிக்க “க்யு ஆர்“ குறியீடு மற்றும் உதவி எண் வெளியிடப்பட்டது

மருந்தகங்களிலோ மருத்துவமனைகளிலோ அளிக்கப்படும் மருந்துகள் காலாவதியானவையாகவோ அல்லது அவற்றால் எதிர் விளைவுகள் ஏதும் தோன்றினாலோ அவை குறித்து தகவல் அறித்திட ஏதுவாக பிரத்யேக “க்யு ஆர்“ குறியீடு மற்றும் உதவி எண் ஆகியவற்றை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இவை நாட்டில் உள்ள அணைத்து அரசு தனியார் மருத்துவமணை மற்றும் மருந்தகங்களில் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக காட்சிப்படுத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு மருந்து கட்டுப்பாட்டுத் துறை தலைவர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி வெளியிட்டுள்ளார்.
அதன்படி அணைத்து மொத்த மற்றம் சில்லறை விற்பனை மருந்தகங்களிலும் பிரத்யேக “க்யு ஆர்“ குறியீடு மற்றும் உதவி எண்ஆகியவற்றை காட்சிப்படுத்துதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 1800-180-3024 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அந்த “க்யு ஆர்“ குறியீடு ஸ்கேன் செய்தோ பொதுமக்கள் தங்கள் புகார்களையோ தகவல்களையோ தெரிவிக்கலாம். இது தொடர்பாக அணைத்த மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

















