சினிமா செய்திகள்
‘த்ரிஷ்யம்’ 2க்கே வாய் பிளந்தால் எப்படி; 3ம் பாகம் ஆன் தி வே – ஜீத்து ஜோசப் கொடுத்த ஹின்ட்
மோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகளை அதற்குள் தொடங்கி விட்டார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
த்ரிஷ்யம் இரண்டாம் பாக முடிவிலும், அடுத்தப் பாகத்திற்கான ஒரு லீட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அதன் இன்னொரு பாகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பலரும் ஆருடம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜீத்து ஜோசப்பும் அது குறித்து சூசகமான பதிலைத் தெரிவித்துள்ளார்.
Unlock a new chapter in the life of Georgekutty and his family.#Drishyam2Trailer out now: https://t.co/LghLqlf1qT#Drishyam2OnPrime premieres on Feb 19, @PrimeVideoIN#ExcitementOverload#MeenaSagar #JeethuJoseph @antonypbvr@aashirvadcine @drishyam2movie #SatheeshKurup
— Mohanlal (@Mohanlal) February 6, 2021
அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், த்ரிஷ்யம் படத்தின் அடுத்தப் பாகம் எடுப்பது குறித்துப் பேசுகையில், ‘இப்போதைக்கு எனக்கு த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை. அதே நேரத்தில் எனக்கு ஒரு நல்ல யோசனை பிடிபட்டால் அதை வளர்த்தெடுத்து அடுத்தப் பாகம் எடுக்க யோசிப்பேன். நான் அதைச் செய்யாமல் விட்டால் ஒரு குற்றம் போல் ஆகிவிடும்.
7 ஆண்டுகளுக்கு முன்னர், த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்திற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், அது இப்போது நடந்துள்ளது அல்லவா. ஒரு விஷயத்தை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
ஜார்ஜ்குட்டி எப்போதும் அலெர்டாக இருக்க வேண்டும். அவர் எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாத சூழலில் இருக்கிறார்’ என சூசகமாக கூறியுள்ளார். இதனால் அடுத்தப் பாகம் வரும் என்ற நம்பிக்கையில் த்ரிஷ்யம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.