Connect with us

சினிமா செய்திகள்

‘த்ரிஷ்யம்’ 2க்கே வாய் பிளந்தால் எப்படி; 3ம் பாகம் ஆன் தி வே – ஜீத்து ஜோசப் கொடுத்த ஹின்ட்

Published

on

மோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகளை அதற்குள் தொடங்கி விட்டார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

த்ரிஷ்யம் இரண்டாம் பாக முடிவிலும், அடுத்தப் பாகத்திற்கான ஒரு லீட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அதன் இன்னொரு பாகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பலரும் ஆருடம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜீத்து ஜோசப்பும் அது குறித்து சூசகமான பதிலைத் தெரிவித்துள்ளார்.

அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், த்ரிஷ்யம் படத்தின் அடுத்தப் பாகம் எடுப்பது குறித்துப் பேசுகையில், ‘இப்போதைக்கு எனக்கு த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை. அதே நேரத்தில் எனக்கு ஒரு நல்ல யோசனை பிடிபட்டால் அதை வளர்த்தெடுத்து அடுத்தப் பாகம் எடுக்க யோசிப்பேன். நான் அதைச் செய்யாமல் விட்டால் ஒரு குற்றம் போல் ஆகிவிடும்.

7 ஆண்டுகளுக்கு முன்னர், த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்திற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், அது இப்போது நடந்துள்ளது அல்லவா. ஒரு விஷயத்தை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜார்ஜ்குட்டி எப்போதும் அலெர்டாக இருக்க வேண்டும். அவர் எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாத சூழலில் இருக்கிறார்’ என சூசகமாக கூறியுள்ளார். இதனால் அடுத்தப் பாகம் வரும் என்ற நம்பிக்கையில் த்ரிஷ்யம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?