Connect with us

இந்தியா

திப்பு சுல்தான் பெயரை பயன்படுத்த கூடாது.. காங்கிரஸ், பாஜகவுக்கு வாரிசுகள் எச்சரிக்கை..!

Published

on

By

அரசியல ஆதாயத்திற்காக திப்புசுல்தானின் பெயரை பயன்படுத்தக்கூடாது என திப்பு சுல்தானின் வாரிசு, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் திப்புசுல்தான் பெயரை இழுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் திப்பு சுல்தானுக்கு ஆதரவாகவும் பாஜகவினர் திப்பு சுல்தானுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருவதை அடுத்து வாரிசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திப்பு சுல்தானில் ஏழாவது தலைமுறை வம்சாவளியைச் சேர்ந்த சஹாப்ஜாதா மன்சூர் அலி என்பவர் திப்பு சுல்தானின் பெயரை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்றும் மீறி பயன்படுத்தினால் அவதூறு வழக்கு தொடர்வோம் என்று இது குறித்து தடை உத்தரவு போடவும் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாஜகவாக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி திப்புசுல்தானின் குடும்பத்தினருக்கு எதுவும் செய்யவில்லை என்றும் திப்பு சுல்தான் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசுவது வாரிசுதாரர்களின் உணர்வை புண்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

திப்பு சுல்தான் வம்சாவளியினார் மற்றும் குடும்பத்தினர் என்பதால் மைசூரை சேர்ந்த வழக்கறிஞர் குழுவிடம் பேசியுள்ளோம் என்றும் அரசியல் ஆதாயத்திற்காக திப்பு சுல்தார் பெயரை பயன்படுத்தக்கூடாது என்பது இதுகுறித்து அவதூறு வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திப்பு சுல்தான் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர் என்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் திப்பு சுல்தான் குடும்பத்தினர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் வாக்குகளுக்காக மட்டுமே அவரது பெயரை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடக சட்டசபை தேர்தலின் பிரச்சாரத்தின் போது திப்புசுல்தான் மற்றும் சாவர்க்கார் என ஒப்பிட்டு கர்நாடக மாநில பாஜக தலைவர் நவீன் குமார் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கர்நாடக மாநில சட்டசபை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே நடக்காது என்றும் மாறாக சாவர்க்கர் மற்றும் திப்பு சுல்தானின் சித்தாந்தத்திற்கு இடையே நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திப்பு சுல்தானின் வழி தோன்றர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் ராமர் மற்றும் அனுமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாஜக என பேசி வரும்போது காங்கிரஸ் கட்சியினரும் திப்பு சுல்தானுக்கு அவதூறு அளிக்கும் வகையில் தான் பேசி வருகின்றனர் என்றும் எனவே இரு கட்சியினரும் திப்பு சுல்தான் குறித்து பேசக்கூடாது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூர் மற்றும் மைசூர் இடையே இயங்கி வரும் ரயில் திப்புசுல்தான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில் சமீபத்தில் உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்றப்பட்டது. இது திப்பு சுல்தான் வாரிசுதாரர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்11 mins ago

அரசு பணத்தை ரூ.1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற 48 வயது பெண்.. எப்படி தெரியுமா?

சினிமா15 mins ago

பிரியங்கா சோப்ராவுக்கே இப்படியொரு கொடுமை நடந்திருக்கா? பரபரக்கும் பாலிவுட்!

சினிமா28 mins ago

அய்யோ! யார பார்க்குறதுன்னே தெரியலையே.. ஜிம் உடையில் கிக்கேற்றும் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா மேனன்!

சினிமா40 mins ago

லியோ படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சினிமா52 mins ago

சிவகார்த்திகேயன் தொடுத்த சம்பள பாக்கி வழக்கு ஒருவழியா செட்டில் ஆனது!

சினிமா9 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு9 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா10 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா10 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்10 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு5 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+