Connect with us

தமிழ்நாடு

கம்யூனிஸ்ட், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் திமுக வெற்றி: அதிர்ச்சியில் தலைவர்கள்

Published

on

கம்யூனிஸ்ட், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து 1-வது வார்டில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கலாராணி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்ற போது கலாராணி போட்டியிடவில்லை என அறிவித்தார். அவருக்கு பதிலாக திமுக சார்பில் 3வது வார்டில் போட்டியிட்ட புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு நிலவியது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மல்லாபுரம் என்ற பகுதியும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?