Uncategorized
கம்பி வடம் இல்லாமல் காற்றில் பயணிக்கும் மின்சாரம்

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல உலோகக் கம்பிகளே (Cables) பிரதானமாக இருந்து வருகின்றன.
ஆனால், தற்போது அந்த நிலையை மாற்றும் வகையில்,பின்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஒரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியை நிகழ்த்தியுள்ளனர்.
பின்லாந்தின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் (University of Helsinki) மற்றும் ஓலு பல்கலைக் கழகத்தைச் (University of Oulu) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காற்றில் மின்சாரத்தைக் கடத்துவதற்கான ஒரு புதிய முறையைக் கண்டறிந்துள்ளனர்.
இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அதிதீவிர மிகையொலி அலைகளை (High-intensity Ultrasonic Waves) பயன்படுத்தி காற்றில் ஒரு கண்ணுக்குத் தெரியாத பாதையை உருவாக்குகிறது.
இந்த ultrasonic waves காற்றில் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தை உருவாக்கி, அதன் வழியாக மின்சாரப் பொறிகளை (Electrical Sparks) சிதறாமல் ஒரு நேர்க்கோட்டில் வழிநடத்துகின்றன. இது ஒரு மாயக் கம்பி போலச் செயல்படுவதால், இதற்கு ‘ஒலி கம்பி’ (Acoustic Wire) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒலி அலைகள் மட்டுமன்றி, ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தைக் கடத்தும் தொழில் நுட்பத்திலும் பின்லாந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
Power-by-Light எனப்படும் இந்த முறையில், அதிநவீன லேசர் கதிர்கள் மூலம் மின்சாரம் தொலைவில் உள்ள Receivers களுக்கு அனுப்பப்படுகிறது.
இதனால் என்ன பயன்கள் எனில்..
அணுமின் நிலையங்கள் மற்றும் உயர் மின்னழுத்த நிலையங்கள் போன்ற ஆபத்தான இடங்களில், கம்பிகள் மூலம் மின்சாரம் பாய்வது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.லேசர் தொழில்நுட்பம் அங்கே பாதுகாப்பான மின் கடத்தலை உறுதி செய்கிறது.
மின்சார அதிர்ச்சிகள் ஏற்படாமல் தடுக்க இது ஒரு சிறந்த தீர்வாகும்.
இதற்கு இணையாக, காற்றில் ஏற்கனவே மிதந்துகொண்டிருக்கும் ரேடியோ அலைகளை (Radio Frequencies) மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது.
இது ‘Wi-Fi for power’ என்று அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் கோடிக்கணக்கான சிறிய IoT சென்சார்களுக்குத் தேவையான மின்சாரத்தைக் காற்றிலிருந்தே பெற முடியும்.
இதற்காகத் தனியாக பேட்டரிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது, இதனால் சுற்றுச்சூழல் மாசும் குறையும்.
தற்போது இந்தத் தொழில்நுட்பங்கள் ஆய்வக அளவிலும், சோதனைக் கட்டத்திலும் இருந்தாலும், இவை எதிர்கால உள்கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கக் கூடியவை.
Plugs, Sockets மற்றும் சிக்கலான மின்சாரக் கம்பிகள் இல்லாத ஒரு நெகிழ்வான தொழில்முறை கட்டமைப்பை நோக்கி உலகம் நகரத் தொடங்கியுள்ளது.
“கம்பிகள் இல்லாத மின்சார உள்கட்டமைப்பு என்பது இனி வெறும் கற்பனை அல்ல; அது உலகளாவிய தொழில்துறையின் அடுத்தகட்ட நகர்வு” என ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.













