தமிழ்நாடு
CUET நுழைவு தேர்வு எப்போது? யூஜிசி அறிவிப்பு
மத்திய பல்கலைக்கழகங்களில் 2022 -23 ஆம் கல்வி ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் இந்த தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்பதை யூஜிசி உறுதியாக உள்ளது .
இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலைக்கு நடைபெறும் யுஜிசி தேர்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் முதல் பிரிவில் தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றும் அதுமட்டுமின்றி பிரெஞ்சு, ஜெர்மன், அரபு மொழிகளில் தேர்வு எழுத விரும்புவோர் பி பிரிவை தேர்வு செய்யலாம் என்றும் ஒரு மாணவர் அதிகபட்சமாக 6 பாடங்களில் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு இரண்டு பகுதிகளாக நடக்கும் என்றும் காலையில் ஒரு மொழி மற்றும் இரு பாடங்கள் சேர்ந்த தேர்வு நடக்கும் என்றும் மாலையில் பொது மற்றும் எஞ்சிய 4 களம் சார்ந்த பாடங்களுக்கு தேர்வு நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு தேர்வு எழுதி நாடு முழுவதும் உள்ள எந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்பதால் இந்த திட்டம் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.