தமிழ்நாடு
கடலூர் திமுக எம்.எல்.ஏ சஸ்பெண்ட்: துரைமுருகன் அறிவிப்பு!
கடலூர் திமுக எம்எல்ஏ சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் கடந்த சில நாட்களாக உள்கட்சி குழப்பம் ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பாக திமுக தலைவர் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருந்தும், சிலர் ராஜினாமா செய்ய மறுப்பதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் கடலூர் திமுக எம்எல்ஏ சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன் கழக கட்டுப்பாட்டை மீறும் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பதவியில் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது