தமிழ்நாடு
ஜெயக்குமாருக்கு 5 நாட்கள் காவலா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைஆகிய ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார் என்பதும் தெரிந்ததே .
திமுக தொண்டரை அரை நிர்வாணபடுத்தி தாக்கிய வழக்கு மற்றும் சாலை மறியல் செய்த வழக்கு ஆகியவைகளில் சாலை மறியல் செய்த வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைத்ததால் அவர் இன்னும் சிறையில் தான் உள்ளார் .
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.