Connect with us

இந்தியா

முழுமையாக முடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பேரணி!

Published

on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்த அமர்வு எந்தவித விவாதங்களும் இல்லாமல் முழுமையாக முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

Congress Rally 1

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அமர்வு தொடங்கியதும் ராகுல் காந்தி லண்டனில் பேசிய கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. மேலும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களும் இதே காரணங்களுக்காக நாடாளுமன்றம் முடங்கியது.

இந்த சூழலில் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரமும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து அமளியை நீட்டிக்க செய்தது. அதானி விவகாரத்தை திசைதிருப்பவே ஆளும் கட்சி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் முடிகிறது. இன்றும் அவை அமளியால் முடங்கியது. இதனையடுத்து தொடர் நாடாளுமன்ற முடக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் தேசிய கொடியை கையில் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றக்கோரி பேரணி சென்றனர். தொடர் நாடாளுமன்ற முடக்கத்திற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?