வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு: டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையத்தில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள அவர்கள் 01.12.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
👩💻 பணியின் பெயர்:
தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Staff)
🔢 காலியிடங்கள்:
1 இடம்
🎓 கல்வித் தகுதி:
கணினி அறிவியல் (Computer Science) துறையில் Graduate Degree பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்.
💰 சம்பளம்:
ரூ. 20,000
🎯 வயதுத் தகுதி:
30/10/2025 தேதியின்படி 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
📝 தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
📩 விண்ணப்பிக்கும் முறை:
https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற தளத்தில் சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆதார ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
📮 முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
பழைய கட்டிடம், அறை எண்: 5, தரைத் தளம்,
மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர்.
📆 விண்ணப்பிக்க கடைசி தேதி:
01.12.2025
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
















