சினிமா
விஜய் பற்றி தனி நீதிபதி கூறிய கருத்துக்கள் நீக்கம்…..நீதிமன்றம் அறிவிப்பு
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். அந்த காருக்கு நுழைவு வரி ரத்து செய்யும்படி சென்னை ஐகோர்ட்டில் அவரது சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதி சுப்பிரமணியம் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைத்ததோடு வரியை ரத்து செய்ய கோரிய விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.
நீதிபதி விதித்த அபராதத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஜய் மேல்முறையீடு செய்தார். மேலும், தன் மீது தனி நீதிபதி கூறிய கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், விஜயின் இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில், விஜய் பற்றி தனி நீதிபதி கூறிய கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கருக்கான நிலுவை தொகை ரூ.32.30 லட்சத்தை ஆகஸ்டு 7ம் தேதி விஜய் செலுத்தி விட்டதாக அவர் தரப்பில் கூறப்பட்டது.