தமிழ்நாடு
வங்கிக்கணக்கை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு: கார்த்திக் கோபிநாத் சிக்குவாரா?
பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் சமீபத்தில் கோவில் திருப்பணி செய்ய செய்ய பணம் வசூலித்து மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
ந்த விசாரணையின்போது கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூபாய் 33 லட்சம் நன்கொடை வசூலிப்பது தொடர்பாக அவருடைய தனிப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கார்த்தி கோபிநாத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து அவர் இன்னும் ஓரிரு நாளில் தனது வங்கி கணக்கை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வங்கி கணக்கு தாக்கல் செய்யப்பட்ட பணம் வசூலித்து மோசடி செய்தாரா என்பது வங்கி கணக்கின் மூலம் தெரிய வந்துவிடும்.
இந்த நிலையில் கார்த்தி கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் என சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.