தமிழ்நாடு
கணக்கு நோட்டை தர முடியாது: ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் தீட்சதர்கள் பதில்!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் கணக்கு நோட்டை தர முடியாது என்று தீட்சிதர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோசடி புகார் வந்ததையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய முடிவு செய்தனர். இதனை அடுத்து சற்று முன்னர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அறநிலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்யச் சென்றனர்.
அப்போது அதிகாரிகளின் ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தீட்சதர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்கு வழக்குகளை தரமுடியாது என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீட்சிதர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்காது என சமீபத்தில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறிய நிலையில் இந்த விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.