இந்தியா
அரசு அதிகாரிங்க மண்டையை அடித்து உடைங்க…- மத்திய அமைச்சர் ‘பகீர்’ பேச்சு

அரசு அதிகாரிகள் கடமையை சரிவர செய்யவில்லை என்றால் அவர்களின் மண்டையை அடித்து உடையுங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.
மத்திய மீன்வளம், விலங்குகள் நலம் மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். அவர் பீகாரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில், ‘எதாவது ஒரு அரசு அதிகாரி நீங்கள் கொடுக்கும் புகார்களுக்கு சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிரம்புக் கொம்பை வைத்து அடித்து மண்டையை உடைத்து விடுங்கள்.
அரசு அதிகாரிகளிடம் நாம் சட்டத்துக்குப் புறம்பாக எந்தப் பணியையும் செய்யச் சொல்லப் போவதில்லை. அதேபோல அவர்களும் நம்மை உதாசீனப்படுத்தும் வேலையைச் செய்ய அனுமதிக்கப் போவதில்லை. இப்படியான விஷயங்களுக்கு ஒரு அரசு அதிகாரி அடிபணியவில்லை என்றால், இந்த கிரிராஜ் சிங் உங்கள் பின்னால் நிற்பான்’ என்று பேசியுள்ளார்.




















